Friday 22 November 2019

சவுக்கு


சவுக்கு

சவுக்கு அயலகத்திலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட மரப்பயிராகும். இப்பயிர் இந்தியாவில் காலனிய ஆட்சியாளர்களால் கார்வார் மாவட்டத்தில் முதன்முதலாக 1668 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சவுக்கு மரங்கள் இயற்கையாக அந்தமான தீவுகள், பங்களாதேஷ், பர்மா ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரைப்பகுதிகளில் காணப்படுகின்றன. இயற்கை இனப்பெருக்கம் அரிதாக உள்ள சவுக்குமரம், தோட்டப் பயிராகப் பயிரிடுவதன் மூலமாக பரவுகிறது.
மரத்தின் தோற்றமும் அமைப்பும்

சவுக்கு விரைவாக வளரும் இயல்புடைய பசுமை மாறா அழகிய தோற்றத்துடன் கூடிய ஊசியிலைகளைக் கொண்ட மரமாகும். இம்மரம் நீளமாகவும், உருண்டை வடிவத்திலும் வளரும் இயல்புடையவை. அரிதாக சில வேளைகளில் கிளைவிடும் இயல்புடையது. இயல்பாக அடாந்து வளரும் இம்மரத்தின் கீழ் புல் பூண்டுகள் சிறு குத்துச்செடிகள் மட்டுமே வளரும்.
இம்மரம் அதிக அளவாக 40 மீ உயரமும், 50 மீ சுற்றளவும் (180 செ.மீ) கொண்டதாக வளரும். குறைந்த காலம் மட்டும் வாழும் இம்மரத்தின் ஆயுட்காலம் 50 ஆண்டு காலமாகும். நல்ல சூழல் இல்லாத இடங்களில் கூட 25 ஆண்டுகள் வளரும். இம்மரம் ஆண்டுக்கு இருமுறை பிப்ரவரி - ஏப்ரல், செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் பூக்கும். இதன் காய்கள் ஜீன் மற்றும் டிசம்பரில் காணப்படும். இட அமைப்பைப் பொறுத்து பூக்கும் மற்றும் கனி உருவாகும் காலம் மாறுபட வாய்ப்புண்டு.

பூத்தலும் மற்றும் காய் உருவாக்கமும்

இம்மரப்பயிர் இரு பூக்கும் பருவங்களைக் கொண்டது. ஆண்மலர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், பெண்மலர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு சிறிது காலம் கடந்தும் பூக்கும். காற்றின் மூலம் மகரந்த சேர்க்கை நிகழும், பழங்கள் உருண்டை வடிவத்திலும் மரக்கூம்பு வடிவத்திலும் பழுத்த சாம்பல்அல்லது மர வண்ண சிவப்பு நிறத்திலும் இருக்கும். மேல்தோல் வெடியாகனி வடிவ அமைப்பில் இருக்கும். ஒவ்வொரு கனியிலும் ஒரு விதை இருக்கும். விதைகள் நுண்ணியதாக இருக்கும். ஜீன், டிசம்பர் மாதங்களில் காய்கள் பழமாகும். பழுப்பு நிற காய்களில் பறக்கும் தன்மையுள்ள விதைகள் 70 முதல் 90 வரை இருக்கும்.
விதை அமைப்பும் சேகரிப்பும்
ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் நன்கு வளர்ந்த சவுக்கு மரங்களிலிருந்து விதைகளை ஜீன் - டிசம்பர் மாதங்களில் கிளைகளை ஆட்டியோ, குச்சிகள் வைத்து தட்டியோ கீழே விழும் விதைகளைச் சேகரிக்கலாம். சேகரிக்கப்பட்ட விதைகளை கைகளால் சுத்தம் செய்ய வேண்டும். சேகரிக்கப்பட்ட விதைகள் சுத்தமான தரையில் நன்கு சூரிய ஒளி படும் வகையில் 3 முதல் 4 நாட்கள் வரை காயவைக்க வேண்டும். சவுக்கின் விதைகள் காற்றினால் எடுத்துச் செல்லப்படும் என்பதால் சூரிய ஒளியில் காயவைத்த பின், விதைகளை நிழலான பகுதியில் மூடப்பட்ட அறைகளில் காய வைக்க வேண்டும். இவ்வாறு விதைகளை 2 முதல் 3 நாட்கள் காய வைக்க வேண்டும்.

இம்மரத்தின் விதைகளை எறும்பு, பூச்சிகளிடமிருந்து காப்பாற்ற சாம்பலுடன் கலந்து மண் சட்டிகளில் இட்டு அதன் வாய்ப்பகுதியை துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். இவ்விதைகளை சில மாதங்கட்குப் பாதுகாக்கலாம். இவ்வாறு பாதுகாக்கப்பட்ட விதைகளை உடனடியாக விதைக்க வேண்டும். பதினைந்து கிலோ எடையுள்ள சவுக்கு காய்களிலிருந்து 12 கிலோ தூய்மையான விதைகளைப் பெறலாம். ஒரு கிலோகிராம் விதையில் 75 லிருந்து 10 இலட்சம் வரை விதைகள் இருக்கும். இதன் தூய்மைத் தன்மை 80 முதல் 90 சதவிகிதமாகும். ஈரப்பதம் 7.3 சதவிகிதமாகும். விதை முளைப்பு 7 முதல் 10 நாட்களுக்குள் 50 முதல் 60 சதவிகிதமாகும்.

விதை மூலம் இனப்பெருக்கம்

சவுக்கின் விதைகள் மிகச்சிறிய அளவில் உள்ளதாலும், மழை, வறட்சி, பூச்சிகள் தாக்குதலினால் அதிகம் பாதிக்கப்படுவதால், நேரடி விதைப்பு முறை சவுக்கு விதைப்புக்கு ஏற்றதல்ல. சவுக்கு இனப்பெருக்கத்துக்கான ஒரே நம்பகமான முறை சவுக்கை ஒன்று முதல் நான்கு மாதம் நாற்றங்காலில் வளர்த்து, வளர்ந்த நாற்றுக்களை இனப்பெருக்கம் செய்வதேயாகும்.
 கன்றகப் பெருக்கம்
சவுக்கை இணையாக வளரும் தண்டுகள் மூலமாகவும், தாவர இனப்பெருக்கம் மேற்கொள்ளலாம். இத்தண்டுகள் அல்லது குச்சிகளை வளர்ச்சி ஊக்கியான இண்டோல் ப்யூட்ரிக் அமிலத்தை (IBA)அடிப்படையாகக் கொண்ட வேர் வளர்க்கும் ஹார்மோன்களில் (3000-6000 ) நனைத்தெடுத்து கன்றுகளை நேர்த்தி செய்யலாம். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட கன்றங்களை 70 முதல் 80 சதவிகிதம் ஈரப்பதம் உள்ள பசுமைக்குடிலில்(green house)  வைக்க வேண்டும். 20-25 நாட்களில் புதிய வேர் உற்பத்தி செய்யப்பட்டு தரமான நாற்றுகள் பெறப்படுகின்றன. நல்ல வளமான தன்மையுடைய மரங்கள் இவ்வாறு இனப்பெருக்கம் செய்யப்படுவதை கன்றுகள் எனலாம்.
விதை மூலம் உயர்தர நாற்றுகள் உற்பத்தி
நாற்றங்கால் நுட்பங்கள்
இடம் நாற்றங்கால் நடவு செய்யப்படும் நிலத்திற்கு அண்மையில் அமைய வேண்டும். தேர்வு செய்யப்படும் இடம் சமவெளியாகவும், மணற்பாங்கானதாகவும், போதுமான நீர்வளம் மிக்க பகுதியாகவும் அமைய வேண்டும்.
நிலத்தேர்வு
பயிரிடப்படும் நிலத்திலுள்ள எல்லா வகையான செடி, கொடிகளையும் அகற்றிவிட வேண்டும். நிலத்தை ஓரளவுக்கு உழவு செய்ய வேண்டும்.
நிலத்தேர்வு
பயிரிடப்படும் நிலத்திலுள்ள எல்லா வகையான செடி, கொடிகளையும் அகற்றிவிட வேண்டும். நிலத்தை ஒரளவுக்கு உழவு செய்ய வேண்டும்.
பாத்திகளின் அமைப்பு
பாத்திகள் வடக்கு தெற்காக அமைய வேண்டும். பாத்திகளின் அளவு 10 மீ X1 மீ /50 செ.மீ. ஒவ்வொரு பாத்திக்கும் இடைவெளிவிடுவது அவசியம், ஒவ்வொரு 50 பாத்திகளுக்கு இடையே 2 மீ இடைவெளிவிட வேண்டும். முதல் மற்றும் இரண்டாம் பாத்திகள் அமைக்க இம்முறையையே பயன்படுத்த வேண்டும்.
மண்ணைத் தயார் படுத்துதல்
பாத்திகள் அமைக்கப்பட்ட பிறகு அப்பாத்திகளில் 30 செ.மீ அளவுக்கு குழிவாக மண் எடுக்கப்பட வேண்டும். அக்குழியில் மணல், செம்மண், பசுந்தாள் உரம் ஆகியவற்றை இட்டு மண்ணை வளமாக்க வேண்டும்.
பாத்திகள் உருவாக்கம்

மணற்பாங்கான மண்வகை உள்ள பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட மண்ணை பண்ணை தொழு உரத்துடன் 11 அளவில் கலந்து குழிகளில் இட வேண்டும். நாற்றங்கால் நில மட்டத்திற்குச் சமமாகவோ அல்லது 5 செ.மீ. குழிவாகவோ அமைய வேண்டும். மணற்பாங்கான மண்வகைகளில் நாற்றங்கால் உருவாக்கும்போது, மணல், பண்ணை உரம் ஆகியவை சரிவிகிதத்தில் கலக்கப்பெற்று குழிகளில் இடப்பட வேண்டும். நாற்றங்கால்களை உருவாக்கும் போது பாரத்தியான் தூள் 14 கிலோ, பூச்சிவிரட்டி, மண்ணுடன் கலந்து தயார் செய்து ஒவ்வொரு பாத்திக்கும் இடவேண்டும். இதன்மூலம் எறும்புகள் விதைகளை எடுத்துச் செல்வதைத்தடுக்கலாம்.
விதைப்பு செய்தல்

ஒவ்வொரு பாத்தியிலும் 400 முதல் 500 கிராம் வரை சுத்தமான விதையை விதைக்க வேண்டும். விதைகளை நல்ல மண்ணில் கலந்து பாத்திகளின் மேல் தூவ வேண்டும். அப்பாத்திகளின் மீது வைக்கோல் வைத்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும். தண்ணீர் தேங்கினால் கன்றுகள் அழுகுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அழுகல் தென்பட்டால் காப்பர் ஆக்சிகுளோரைடு 0.25% பூசணக்கொல்லி கரைசலை நீரில் கலந்து பரவலாக ஊற்ற வேண்டும். பத்து நாட்களில் விதைகள் முளைக்க ஆரம்பித்துவிடும். நாளொன்றுக்கு இருமுறை ஒரு மாத கால அளவில் 10 செ.மீ அளவுக்கு நாற்று வளரும் வரை நீர் தெளிக்க வேண்டும். அவைகளை பாலீத்தீன்பைகளிலோ, இரண்டாம் நிலைப்பாத்திகளுக்கோ இரண்டாம் பாத்திகளுக்குக் கொண்டு செல்லும் வரை ஒரு நாள் ஒன்றுக்கு இருமுறை நீர் தெளிக்க வேண்டும். விதைகளுக்கு கரையான் தாக்குதல் இருந்தால் பாரத்தியான தூள் பயன்படுத்தப்படவேண்டும்.
குச்சிநடுவு[ (Stock)
மூன்றிலிருந்து நான்குமாத வயதுடைய நாற்றுகளை நாற்றங்காலிலிருந்து இரண்டு முறைகளில் நடலாம்.
நடவுமுறை
தாய் நாற்றங்கால்களிலிருந்து பெறப்பட்ட நாற்றுகளை நாற்றங்கால்களிலிருந்து அகற்றி 10 x 20 செ.மீ. அளவுள்ள மண்கலவை உள்ள பாலீத்தீன் பைகளில் நடவு செய்ய வேண்டும். இப்பைகளுக்குத் தொடர்ச்சியாக நீர் விட வேண்டும். இவ்வாறு வளர்க்கப்படும் நாற்றுக்கள் நல்லமுறையில் வளர்ந்து விரைவாக வேர்பிடிக்கும். நாற்றுக்கள் எந்தவித பாதிப்புக்கும் ஆளாகாத வகையில் ஒருவாரம் முதல் பத்து நாட்கள் வரை நிழல் அவசியம். நன்கு வேர்விட்ட பிறகு நிழல் தேவையில்லை. 45 முதல் 50 செ.மீ வரை உயரம் உள்ள நாற்றுகள் பயிரிட ஏற்றவை. வேர்கள் வெளிவர தொடங்கிய பிறகு பாலித்தீன் பைகளை மாற்ற வேண்டும்.

நேர்த்தி செய்யப்பட்டகன்றுகள்
இரண்டாம்தர பாத்திகளில் வளர்க்கப்பட்ட இளம் நாற்றுக்களின் வேர் பகுதிகளை நன்றாக வெட்டிவிட வேண்டும். அவ்வேர்களை மண்குழம்பில் நனைத்து எடுக்க வேண்டும். இது மிகவும் குறைந்த செலவில் நேர்த்தி செய்யப்படும் முறையாகும். இந்த ஆறையானது மணற்பாங்கான இடங்களில் அதிக அளவில் கடைப்பிடிக்கப்படுவதோடு மேலும் மழைக்காலங்களில் இம்முறை நல்ல வளர்ச்சியைக் கொடுக்கிறது.
நடவுமுறை
பொதுவாக உழவர்கள் 0.8 மீ.லிருந்து 1 மீட்டர் இடைவெளியில் நடவு செய்யும்போது மெல்லிய தண்டுப்பகுதி கிடைக்கும். எனவே இடைவெளியை 4X 4 லிருந்து 6X 6 அடி அளவு நடுவது நல்லது. இம்முறை மூலம் முதலாண்டில் ஊடுபயிர் செய்வதற்கு ஏற்றது. மேலும் மரங்கள் நன்கு வளர்வதற்கு இந்த இடைவெளி பயன்படும். தொடக்க நிலையில் மரத்தின் சுற்றளவு அதிகரிக்க வாய்ப்புண்டு. பாலித்தீன் பைகளில் உள்ள நாற்றுக்களை மணற்பாங்கான மண்ணில் பாலித்தீன் பையின் அளவு ஆழத்திலும் அகலத்திலும் நல்ல மழைக்காலத்தில் நடவு செய்யலாம்.
நடவு செய்யப்பட்ட மரங்களுக்கு நீர்ப்பாய்ச்சுதல் தொடர்ந்தால் மரங்கள் நல்ல முறையில் வேகமாக வளரும் கடினமான களிமண்ணில் 30 செ.மீ. அளவுக்கு ஒரு சிறு குழி தோண்டப்பட்டு நாற்றங்கால் பையின் பாலித்தீன் பைகள் அகற்றப்பட்டு, பையில் உள்ள மண் பாதிக்கப்படாத வகையில் நடவேண்டும். நாற்றங்காலிலிருந்து பிடுங்கப்பட்டு நடப்படும் கன்றுகளை நடவு செய்ய வேர் ஆழத்தின் அளவுக்கு கடப்பாரையால் துளையிடப்பட்டு நடவு செய்யப்பட வேண்டும். நாற்றுகளின் மெலிதான வேர்ப்பகுதிகள் வெட்டி எடுக்கப்பட்டு நடவு செய்யப்பட வேண்டும்.

No comments:

Post a Comment