Friday 22 November 2019

பப்பாளி மரம்


பப்பாளி மரம்


அனைத்து நோயையும் கட்டுப்படுத்தும் பப்பாளி விதை – இயற்கை மருத்துவம் பப்பாளியில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். பப்பாளியை சாப்பிட்டால் நல்லது எனத் தெரியும். ஆனால் பப்பாளி விதையையும் உண்ணலாம் எனத் தெரியுமா? பப்பாளி விதைகள் பப்பாளியைவிட நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என நிறைய ஆய்வுகள் கூறுகின்றன. சிறிது கசப்பு சுவையுடன்தான் இருக்கும். ஆரோக்கியத்தை விரும்புவர்கள் அப்படியே பழத்தோடு சாப்பிடலாம். சுவையையும் கூட விரும்புவர்கள் விதைகளை மசித்து உப்புடனோ, வேறு உணவுகளுடனோ, அல்லது பழசாறுடனோ கலந்து சாப்பிடலாம் . இது நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதால், குழந்தைகளுக்கு எளிதில் அவை ஏற்றுக் கொள்ளமுடியாமல் போகலாம். ஆகவே மருத்துவரை ஆலோசித்துவிட்டு குழந்தைகளுக்கு தரலாம்.


பப்பாளி மரத்தின் பயன்கள் :
  • பப்பாளி விதைகள் பெப்பைன் என்ற என்சைமைக் கொண்டுள்ளது. அது முழுக்க ஜீரணத்திற்கு உதவுகிறது. ஆகவே கல்லையும் ஜீரணிக்கக் கூடிய ஆற்றல் இந்த விதைகளுக்கு உண்டு.
  •  தினமும் அல்லது வாரம் மூன்று முறையாவது பப்பாளி விதைகளை சாப்பிட்டால், வயிற்றில் பூச்சிக்கள் மற்றும் புழுக்கள் ஏற்படாது.
  •  பப்பாளி விதைகளில் உள்ள சத்துக்கள் வயிற்றுப் பூச்சிகளை அழிக்கிறது.
  •  குழந்தைப் பேறினை தள்ளிபோட வேண்டும் என நினைப்பவர்கள், மாத்திரை மருந்துகளுக்கு போகாமல் இந்த பப்பாளி விதைகளை உண்ணலாம்.
  •  இவை இயற்கையாகவே கருத்தரிக்க விடாமல் செயல்படும். இவைகளை தொடர்ந்து உட்கொள்ளும்போது, உடலில் கொடிய மாற்றங்களை உண்டாக்கும் கேன்சர் செல்கள் உருவாகாது என ஆய்வு கூறுகின்றது.
  •  பல வகையான ஆர்த்ரைடிஸ்: கை, கால், மூட்டு வலி, ஆகியவற்றால் உண்டாகும் வீக்கத்தை குறைத்து, வலியைப் போக்கும் இந்த பப்பாளி விதைகள்.
  • பப்பாளி கல்லீரலுக்கு தேவையான ஆரோக்கியமான போஷாக்கைத் தரும். லிவர் சிரோசிஸ் போன்ற கல்லீரல் நோய்களை குணப்படுத்தும். பப்பாளி விதைகளை பசை செய்து அதனை எலுமிச்சை சாற்றில் கலந்து குடிக்கலாம்.
  • சிறு நீரக செயல்பாட்டினையும் நன்றாக தூண்டும். இதனால் உடலில் தீங்கைத் தரும் நச்சுக்களும் கழிவுகளும் எளிதில் வெளியேறுகின்றன.


No comments:

Post a Comment